Kannirendum

Thamarai

கண்ணிரண்டும் நீயே
கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே!

கண்ணிரண்டும் நீயே
கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே!

கடல் நீயா, கரை நானா
அலை போல அன்பை அள்ளி தர
இமை நீயா, கனவுகள் நானா
கனையாமல் என்னை
பூட்டி வைக்கிறாயே!

இந்த நொடி போதும்
இன்னும் என்ன வேணும்?
மிச்சமுள்ள ஆயுள், வாழ்ந்துவிடுவேன்
எத்தனையோ ஆச
உள்ளுக்குள்ள வீச
என்ன சொல்லி பேச?
ஏங்கி கெடக்கேன்

உன்னால உணருது இப்போ
எல்லாமே மாறுது பார்
சொல்லாம வானமும் பேய்து
வெள்ளாம கூடுது பார்!
பாடாத தாலட்ட
நான் பாட வேணும்
தூங்காத தூக்கத்த
நீ தூங்கணும்
ஊட்டாத பால் சோற
நான் ஊட்ட வேணும்
நோகாமல் நீ ஓட
நான் கெஞ்சணும்

கடல் நீயா, கரை நானா
அலை போல அன்பை அள்ளி தர
இமை நீயா கனவுகள் நானா
கனையாமல் என்னை
பூட்டி வைக்கிறாயே
கண்ணிரண்டும் நீயே
கனாக்களும் நீயே
கண்ணீர் துளி நீயே
என் அமுதே!
(ஹே-ஹே-ஹே-ஹே)

Other artists of Film score